'பப்ஜி' விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தையே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!
லாகூர்: பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை சுட்டுக் கொன்றான். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தவர் நஹித் முபாரக்(45). சுகாதாரப் பணியாளர். இவருக்கு 22 வயதில் நஹித் முபாரக் என்ற மகனும் மற்றும் 14 வயதில் வேறு ஒரு மகனும், 2 மகள்களும் இருந்தனர். நஹித் முபாரக் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்
இந்த நிலையில் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான நஹித் முபாரக்கின் 14 வயது மகன்தான் தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

PUBG விளையாட்டுக்கு அடிமை
PUBG விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எந்த நேரமும் அதனை விளையாடி வந்துள்ளான். இரவு வேளையில் நஹித் முபாரக் இதனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது தாயின் கைத்துப்பாக்கியை அலமாரியில் இருந்து எடுத்து தாய் நஹித் முபாரக்கையும், தூங்கி கொண்டிருந்த மற்ற 3 உடன்பிறப்புகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் துப்பாக்கியை சாக்கடையில் அவன் வீசி விட்டான்.

மனரீதியாக பாதிப்பு
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குடும்பமே பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் கொலை குற்றவாளி சிறுவன் வீட்டின் மேல் மாடியில் இருந்ததாகவும், தனது குடும்பம் எப்படி கொல்லப்பட்டது? என்று தெரியவில்லை என அவன் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.

போலீசார் கூறுவது என்ன?
படிப்பில் கவனம் செலுத்தாததற்காகவும், PUBG விளையாட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காகவும் சிறுவனை நஹித் முபாரக் அடிக்கடி எச்சரித்து வந்ததாகவும், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்றும் போலீசார் தெரிவித்தனர். லாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி, மனரீதியாக பாதிக்கப்பட்டு 3 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications