'பப்ஜி' விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தையே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!
லாகூர்: பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை சுட்டுக் கொன்றான். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தவர் நஹித் முபாரக்(45). சுகாதாரப் பணியாளர். இவருக்கு 22 வயதில் நஹித் முபாரக் என்ற மகனும் மற்றும் 14 வயதில் வேறு ஒரு மகனும், 2 மகள்களும் இருந்தனர். நஹித் முபாரக் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்
இந்த நிலையில் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான நஹித் முபாரக்கின் 14 வயது மகன்தான் தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

PUBG விளையாட்டுக்கு அடிமை
PUBG விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எந்த நேரமும் அதனை விளையாடி வந்துள்ளான். இரவு வேளையில் நஹித் முபாரக் இதனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது தாயின் கைத்துப்பாக்கியை அலமாரியில் இருந்து எடுத்து தாய் நஹித் முபாரக்கையும், தூங்கி கொண்டிருந்த மற்ற 3 உடன்பிறப்புகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் துப்பாக்கியை சாக்கடையில் அவன் வீசி விட்டான்.

மனரீதியாக பாதிப்பு
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குடும்பமே பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் கொலை குற்றவாளி சிறுவன் வீட்டின் மேல் மாடியில் இருந்ததாகவும், தனது குடும்பம் எப்படி கொல்லப்பட்டது? என்று தெரியவில்லை என அவன் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.

போலீசார் கூறுவது என்ன?
படிப்பில் கவனம் செலுத்தாததற்காகவும், PUBG விளையாட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காகவும் சிறுவனை நஹித் முபாரக் அடிக்கடி எச்சரித்து வந்ததாகவும், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்றும் போலீசார் தெரிவித்தனர். லாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி, மனரீதியாக பாதிக்கப்பட்டு 3 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications