பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க கூடாது: ஹைகோர்ட் தீர்ப்பு
அகமதாபாத்: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிய 14 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கர்ப்பத்தை கலைக்க உத்தரவிட முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 20 வாரங்களை கடந்த கருவை கலைக்க தற்போதுள்ள சட்டத்தில் இடமில்லை என்பதே நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காரணம்.
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தைராயிடு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக ஆண் டாக்டர் ஒருவரிடம் ரெகுலராக சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று, சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு மயக்க ஊசி போட்ட டாக்டர், மயக்க நிலையிலேயே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்ததும், நடந்தவற்றை தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். எனவே, அவர் போலீசில் புகார் அளித்தார். டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்துவிட்டார். ஏற்கனவே பலாத்கார புகார் நிலுவையிலுள்ளதால், கோர்ட் அனுமதி பெற்று கருவை கலைக்க சிறுமியின் தந்தை முடிவு செய்து, ஹிமாத்நகர் செஷன்ஸ் கோர்ட்டில் அனுமதி கேட்டார்.
ஆனால், அப்போது சிறுமியின் கர்ப்பம் 20 வாரங்களை தாண்டிவிட்டதால், கருவை கலைக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி அறிவித்துவிட்டார். தற்போதுள்ள சட்டத்தின்படி 20 வாரம் தாண்டிய கருவை கலைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து குஜராத் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை. 14 வயதான தனது மகளால், விருப்பம் இல்லாமல் பெறும் குழந்தையை வளர்க்க முடியாது. அதற்கான பக்குவமும் எனது மகளுக்கு இல்லை என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி அபிலாஷா குமாரி விசாரித்தார். இருப்பினும், சட்டப்படி, கருவை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று இன்று ஹைகோர்ட்டும் கைவிரித்துவிட்டது. தற்போது அச்சிறுமி 24 வார கர்ப்பவதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications