2 ஆண்டுகள் காலியாக இருந்த காவிரி நதி நீர் தீர்ப்பாயத்துக்கு புதிய தலைவர் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் உடல் நலக்குறைவால் கடந்த 2012ஆம் ஆண்டு பதவி விலகினார்.
இதையடுத்து, தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் காலியாக இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளிவந்துள்ளது.












Click it and Unblock the Notifications