உத்தரகாண்டில் பெரும் சோகம்.. பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் திரிசூல மலைச் சிகரம் உள்ளது. இந்திய கடற்படையை சோந்த10 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காக கடந்த 3-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டது.

பனிச்சரிவு
இந்த குழுவினர் நேற்று திரிசூல மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் மயமானார்கள். இது குறித்து உடனடியாக இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவிக்கிப்பட்டது.

4 பேர் பலி
மீட்பு குழுவினர் தீவிர மீப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் லெப்டினன்ட் சிடிஆர் ரஜினிகாந்த் யாதவ், லெப்டினன்ட் சிடிஆர் யோகேஷ் திவாரி, லெப்டினன்ட் சிடிஆர் அனந்த் குக்ரெட்டி, ஹரி ஓம் ஆவார்கள்.

ராஜ்நாத் சிங் இரங்கல்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை வீரர்கள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' இந்திய கடற்படை மலையேறும் பயணத்தில் மவுண்ட் திரிசூலுக்குச் சென்ற நான்கு கடற்படை வீரர்களின் துயர மரணத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் நாடு விலைமதிப்பற்ற இளம் உயிர்களை மட்டுமல்ல, தைரியமான வீரர்களையும் இழந்துள்ளது.

பிரார்த்திக்கிறேன்
லெப்டினன்ட் சிடிஆர் ரஜினிகாந்த் யாதவ், லெஃப்ட் சிடிஆர் யோகேஷ் திவாரி, லெஃப்ட் சிடிஆர் அனந்த் குக்ரெட்டி மற்றும் ஹரி ஓம் எம்சிபிஓ ஆகியோரின் குடும்பங்களுக்கு என் இதயம் செல்கிறது. இந்த துயரமான நேரத்தில் என் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. மாயமான வீரர்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று ராஜ்நாத் சிங் கூறியுளளார்.

பெரும் சோகம்
பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கடற்படை அதிகாரிகளுக்கு நெட்டின்ச்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications