இந்தியாவில் பிரசவத்தின் போது ஒரு மணி நேரத்தில் 5 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.. உலக சுகாதார அமைப்பு
டெல்லி: இந்தியாவில் பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து பெண்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம். ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும் என்பார்கள். ஆனால் பிரசவத்தின் போது அதிகப்படியான பெண்கள் உயிரிழப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படும் பிரசவ மரணத்தில் 17 சதவீதம் ஆகும். இதற்கு முக்கிய காரணம் பிரசவத்தின் போது ஏற்படும் அதிக அளவிளான ரத்த கசிவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு லட்சம் பெண்களில் 174 பேர் மரணம் அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைகிறார்கள்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இந்தியாவிற்கான பிரதிநிதி கூறுகையில் " புள்ளி விபரங்கள்படி கிட்டத்தட்ட ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஐந்து பெண்கள் உயிரிழக்கிறார்கள். இது உலக பிரசவ மரணத்தில் 17 சதவீதமாகும்" என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications