தினகரனுக்கு முற்றுகிறது நெருக்கடி... இரட்டை இலை பெற லஞ்சம்... டெல்லி வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு
இரட்டை இலை சின்ன விவாகரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், மேலும் ஒரு புதிய பிரிவை சேர்த்துள்ளனர் போலீசார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். 35 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணையை டெல்லி போலீசார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக ஆதாரங்களை ஆய்வு செய்து பட்டியலிட்டு வருகிறார்கள்.
டெல்லி ஹோட்டலில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது எம்.பி. என்ற பெயரில் போலி அடையாள அட்டை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த போலி எம்.பி. அடையாள அட்டையைப் பயன்படுத்தி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நாடாளுமன்றத்துக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் புதிய பிரிவு ஒன்று கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 , அதாவது மதிப்புமிக்க பாதுகாப்பு ஏற்பாட்டில் போலியை உருவாக்குதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தினகரன் வழக்கில் இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்வது கவனிக்கத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications