For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கையை எங்கே வைத்தான் என சொல்லவே அருவெறுப்பா இருக்கு"! கோழிக்கோடு மால் பாலியல் சீண்டல் குறித்து நடிகை

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பிரபல மாலில் நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.

கொச்சி மற்றும் கண்ணனூருக்கு பெண் போலீஸார் அடங்கிய ஒரு குழு அந்த நடிகைகளிடம் விசாரணை நடத்த சென்றுள்ளது. அது போல் போலீஸாரும் அந்த மாலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடித்த சாட்டர்டே நைட் எனும் மலையாள படம் திரைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்த படம் வருகிறது.

இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெறுகின்றன. இந்த படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புது புது வழிகளில் கொலைகள்.. கலங்கும் கேரளா.. திரிஷ்யம் பாணியில் மைத்துனரை வீட்டில் புதைத்த மச்சான்!புது புது வழிகளில் கொலைகள்.. கலங்கும் கேரளா.. திரிஷ்யம் பாணியில் மைத்துனரை வீட்டில் புதைத்த மச்சான்!

சாட்டர்டே நைட்

சாட்டர்டே நைட்

இந்த சாட்டர்டே நைட் படத்தின் பிரமோஷனுக்காக கோழிக்கோட்டில் ஒரு மாலில் கடந்த 27 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகைகளை பார்க்க மாலில் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பாலியல் சீண்டல்

பாலியல் சீண்டல்

அப்போது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு படக்குழுவினர் அங்கிருந்து கிளம்பினர். அப்போது நடிகர், நடிகைகளை அருகே பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர், அந்த நேரம் பார்த்து நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஒரு ரசிகர் ஈடுபட்டதை கண்ட சக நடிகை அந்த நபரை பளார் என அறைந்தார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இந்த சம்பவம் குறித்து படக்குழுவினர் பன்தீரன்காவு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்படி அந்த காவல் நிலைய போலீஸார் விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அந்த விழாவில் நடந்தது குறித்து நடிகை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறுகையில், கோழிக்கோடு மாலில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினோம்.

கூட்டத்திலிருந்து இழுத்த நபர்

கூட்டத்திலிருந்து இழுத்த நபர்

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் என்னை இழுத்தது போல் இருந்தது. அந்த நபர் என்னை எந்த இடத்தில் கை வைத்தார் என சொல்வதற்கே அருவறுப்பாக இருந்தது. இது வரை எத்தனையோ பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளோம். இது வரை இப்படி நடந்ததே இல்லை. என்னுடன் வந்த சக நடிகைக்கு இதே போன்ற சீண்டல் நடந்தது. அவர் உடனடியாக அடித்துவிட்டார். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டேன் என தெரிவித்திருந்தார்.

English summary
Malayalam Actress says that a person from the crowd grabbed her in mall and she was in dumbstruck when it was happened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X