நீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி.. துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக, தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக, தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பணியாற்ற விரும்பும் துப்பறியும் அமைப்புகளின் விண்ணப்பங்களை கேட்டு இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இது அந்த வங்கிக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அந்த வங்கி, லோன்களை கொடுக்காமல் இருக்கும் நபர்களை பிடிக்க புதிய முறையை கையாள இருக்கிறது. முதல்கட்டமாக, லோன் வாங்கி அதை பல நாட்களாக அடைக்காமல் இருக்கும் நபர்களின் பெயர்களை பத்திரிக்கைகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதாவது அவர்களின் பெயர்களை பொதுவில் வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்த போவதாக அந்த வங்கி கூறியுள்ளது.
இரண்டாவது கட்டமாக, இப்படி கடனை திரும்ப கொடுக்காமல் சுற்றும் நபர்களை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பணியாற்ற விரும்பும் துப்பறியும் அமைப்புகளின் விண்ணப்பங்களை கேட்டு இருக்கிறது. இவர்கள் வசம் குற்றவாளிகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
மே 5ம் தேதி வரை அந்த வங்கி இந்த விண்ணப்பங்களை பெறும். அதில் இருந்து ஒரு துப்பறியும் அமைப்பை தேர்வு செய்து இந்தியா முழுக்க அந்த வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிக்க வைக்க போகிறார்கள். இதற்காக ஒரு வருடம் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications