பேபி பஜார் நடத்தி பெண் குழந்தைகளை விற்ற தெலுங்கானா ‘சொர்ணாக்கா’ கைது!
நல்கொண்டா: தெலுங்கானாவில் பெண் குழந்தைகளை விற்கும் தாதாவாக செயல்பட்டு வந்த காம்லி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக மாறிய தெலுங்கானாவில் பின்தங்கிய பகுதியாக நல்கொண்டாவில் பெண் குழந்தைகள் அரசு மையம் ஒன்றில் சந்தை நடத்தி வெளிப்படையாக விற்கப் படுவதை ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று அம்பலப் படுத்தியது.

வறுமை காரணமாக பெற்றோரே பெண் குழந்தைகளை விற்பதும், இதற்கு இடைத் தரகர்கள் பலர் உதவியாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. ரூ. 5 ஆயிரம் முதல் பெண் குழந்தைகள் விற்கப் படுவதும், சட்டத்திற்குப் புறம்பாக ஆவணங்களை மறைத்து இந்த வியாபாரத்தில் பலர் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியைத் தொடர்ந்து, 6 பேர் மீது தெலுங்கானா போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தக் குழந்தைகள் விற்பனைச் சந்தையின் முக்கிய நபரான காம்லி என்ற பெண் தாதாவையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
கடந்த 15 மாதங்களுக்கு முன் அப்பெண்ணால் விற்கப்பட்ட 15 மாத பெண் குழந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக அக்குழந்தையின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்களை மகன்களை விட மகள்களே முதுமைக் காலத்தில் பராமரிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், தெலுங்கானா பெற்றோர் பெண் குழந்தைகளை விற்பது மிகுந்த கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications