டெல்லியில் 'எய்ம்ஸ்' தமிழக மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை- பிரேத பரிசோதனை அறிக்கையில் 'திடுக்'-
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை; விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரவணன் எம்.டி., படிப்பில் சேர்ந்து படித்தார். அவர் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி மர்மமான முறையில் தனது அறையில் கிடந்தார்.
முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வலியுறுத்தினர்.

டெல்லி கோர்ட்டில் வழக்கு
இதனிடையே சரவணனின் தந்தை கணேசன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகன் சரவணன் கொலை செய்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது மரணம் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை டெல்லி போலீசிடம் கேட்டும் தரவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே போலீஸ் துணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

மத்திய அரசுக்கு உத்தரவு
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.பாதக் முன்னிலையில் செப்டம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான பதிலை 4 வாரத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நவ.10க்கு ஒத்திவைப்பு
மேலும் சரவணனின் உடற்கூறு அறிக்கை, முதல் தகவல் அறிக்கை நகல்களை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விஷ ஊசி போட்டு கொலை
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவர் சரவணன் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஷ ஊசியானது மருத்துவம் தெரிந்த ஒருவராலே செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications