ஐ.எஸ்.ஐ.எஸ்- அல்கொய்தா கூட்டாக இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த சதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா மீது ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கங்கள் இணைந்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உளவுத்துறை தெரிவித்துள்ள தகவல்கள்:
- ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தப் போவதாக செப்டம்பர் 4-ந் தேதி முதல் 3 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
- இந்தியா மீது இந்த இரு இயக்கங்களும் இணைந்து தாக்குதல் நடத்தும் சாத்தியங்களை மறுக்க முடியாது.
- ஈராக், சிரியாவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டவர் மீது தாக்குதல் நடத்துவதான் இந்த இயக்கங்களின் நோக்கம்.
- குறிப்பாக கோவா, ராஜஸ்தான் போன்ற சுற்றுலா தலங்களில் உள்ள வெளிநாட்டவர்தான் தீவிரவாத இயக்கங்களின் இலக்காக இருக்கும்.
- இந்தியாவில் தீபாவளி முக்கிய பண்டிகைக் காலம். இக்காலத்தில் தாக்குதல் நடத்துவதில் பல தீவிரவாதி இயக்கங்கள் முனைப்பு காட்டுகின்றன.
- லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம், 2008ஆம் ஆண்டு கோவாவை பலமுறை வேவு பார்த்து தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் லஷ்கர் தீவிரவாதி கைது செய்யப்பட்ட நிலையில் இத்திட்டத்தை அந்த இயக்கம் கைவிட்டது.
- சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கொழும்பு பிரிவு கண்காணித்து வருகிறது. அண்மையில் கைது செய்யபட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன், சென்னை மற்றும் பெங்களூரில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதை தெரிவித்திருக்கிறான்.
- அதேபோல் கைது செய்யப்பட்ட தீவிரவாதி தெஹ்சின் அக்தர் மூலம் ராஜஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிப்பாக அமெரிக்கா நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications