ஆந்திராவில் நாளை 2 லட்சம் கெட்டிமேளம் கொட்டப் போகுது! நிரம்பி வழியும் மண்டபங்கள்
நகரி: ஆந்திராவில் நாளை மட்டும் கிட்டதட்ட 2 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ள காரணத்தினால் மண்டபங்கள் நிரம்பி வழிவதுடன், புரோகிதர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இந்த மாதம் பல்வேறு முகூர்த்த நாள் இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்கள் சிறந்த முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.
அதுவும் நாளை மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.

சுபமுகூர்த்த நேரம்:
நாளை அதிகாலை 12.33 மற்றும் 12.44, 3.00 மணி காலை 9 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்கள் நல்ல நேரமாகும்.

2 லட்சம் கல்யாணம்:
இந்த நேரங்களில் திருமணம் நடத்த தெலுங்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாளை ஒரேநாளில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் மட்டும் 30:
திருப்பதியில் மட்டும் நாளை 30 ஆயிரம் திருமணங்கள் நடக்கிறது. இதனால் திருமண மண்டபம், புரோகிதர்கள், அலங்கார வடிவமைப்பாளர், சமையல் கலைஞர்கள், இசை கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் ஆகியோருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மற்ற விஷேசங்கள்:
திருமணம் மட்டுமல்லாமல் கிரகபிரவேசம், நிச்சயதார்த்தம், பூமிபூஜை ஆகியவையும் நாளை ஏராளமாக நடைபெறுகிறது. நிலம் மற்றும் வீடு பத்திர பதிவும் நாளை நடத்த தெலுங்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

களை கட்டிய
ஒரு திருமணத்திற்காக ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை செலவிடபடுவதாக திருமண காண்டிராக்டர் ராமராவ் தெரிவித்தார். ஆந்திர முழுக்க எங்கு பார்த்தாலும் இன்றைக்கே மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தொடங்கி களை கட்டி ஆரம்பித்து விட்டன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications