ஆந்திராவில் நாளை 2 லட்சம் கெட்டிமேளம் கொட்டப் போகுது! நிரம்பி வழியும் மண்டபங்கள்
நகரி: ஆந்திராவில் நாளை மட்டும் கிட்டதட்ட 2 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ள காரணத்தினால் மண்டபங்கள் நிரம்பி வழிவதுடன், புரோகிதர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இந்த மாதம் பல்வேறு முகூர்த்த நாள் இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்கள் சிறந்த முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.
அதுவும் நாளை மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.

சுபமுகூர்த்த நேரம்:
நாளை அதிகாலை 12.33 மற்றும் 12.44, 3.00 மணி காலை 9 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்கள் நல்ல நேரமாகும்.

2 லட்சம் கல்யாணம்:
இந்த நேரங்களில் திருமணம் நடத்த தெலுங்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாளை ஒரேநாளில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் மட்டும் 30:
திருப்பதியில் மட்டும் நாளை 30 ஆயிரம் திருமணங்கள் நடக்கிறது. இதனால் திருமண மண்டபம், புரோகிதர்கள், அலங்கார வடிவமைப்பாளர், சமையல் கலைஞர்கள், இசை கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் ஆகியோருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மற்ற விஷேசங்கள்:
திருமணம் மட்டுமல்லாமல் கிரகபிரவேசம், நிச்சயதார்த்தம், பூமிபூஜை ஆகியவையும் நாளை ஏராளமாக நடைபெறுகிறது. நிலம் மற்றும் வீடு பத்திர பதிவும் நாளை நடத்த தெலுங்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

களை கட்டிய
ஒரு திருமணத்திற்காக ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை செலவிடபடுவதாக திருமண காண்டிராக்டர் ராமராவ் தெரிவித்தார். ஆந்திர முழுக்க எங்கு பார்த்தாலும் இன்றைக்கே மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தொடங்கி களை கட்டி ஆரம்பித்து விட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications