கருப்புப் பண விவகாரம்... மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது: அன்னா ஹசாரே விமர்சனம்
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே. இவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் (பா.ஜனதாவினர்) வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை 100 நாட்களில் மீட்டு கொண்டு வருவோம் என்று கூறினர். நாடாளுமன்ற தேர்தலின்போது இவ்வாறு அவர்கள் வாக்குறுதி அளித்தனர். கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் 15 ரூபாயை கூட மீட்டு கொண்டு வரவில்லை.
பொய் வாக்குறுதி அளித்தவர்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு (பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு) மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலுக்கு எதிராக 2011-ம் ஆண்டு நடைபெற்ற இயக்கம் தற்போது விழித்து கொண்டு உள்ளது.
அரசியல் கட்சிகளால் மாற்றம் கொண்டு வர முடியாது. அரசியலமைப்பு சட்டமும் அரசியலை பற்றி குறிப்பிடவில்லை. இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு குடிமகனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தான் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. 543 சிறந்த தனிப்பட்ட நபர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) வெற்றி பெற்று, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது தான் மாற்றம் ஏற்படும். இதற்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் விழித்துக்கொண்டு கட்சி அரசியலை நிராகரிக்க வேண்டும். அந்த தருணத்தில் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக 543 பேரை தேர்ந்தெடுக்கப்படும் போது உண்மையான ஜனநாயகம் ஏற்படும். நாட்டின் சுதந்திரத்துக்காக மக்கள் தியாகம் செய்தார்கள். ஆனால் ஜனநாயகத்துக்காக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications