கருப்புப் பண விவகாரம்... மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது: அன்னா ஹசாரே விமர்சனம்
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே. இவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் (பா.ஜனதாவினர்) வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை 100 நாட்களில் மீட்டு கொண்டு வருவோம் என்று கூறினர். நாடாளுமன்ற தேர்தலின்போது இவ்வாறு அவர்கள் வாக்குறுதி அளித்தனர். கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் 15 ரூபாயை கூட மீட்டு கொண்டு வரவில்லை.
பொய் வாக்குறுதி அளித்தவர்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு (பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு) மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலுக்கு எதிராக 2011-ம் ஆண்டு நடைபெற்ற இயக்கம் தற்போது விழித்து கொண்டு உள்ளது.
அரசியல் கட்சிகளால் மாற்றம் கொண்டு வர முடியாது. அரசியலமைப்பு சட்டமும் அரசியலை பற்றி குறிப்பிடவில்லை. இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு குடிமகனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தான் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. 543 சிறந்த தனிப்பட்ட நபர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) வெற்றி பெற்று, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது தான் மாற்றம் ஏற்படும். இதற்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் விழித்துக்கொண்டு கட்சி அரசியலை நிராகரிக்க வேண்டும். அந்த தருணத்தில் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக 543 பேரை தேர்ந்தெடுக்கப்படும் போது உண்மையான ஜனநாயகம் ஏற்படும். நாட்டின் சுதந்திரத்துக்காக மக்கள் தியாகம் செய்தார்கள். ஆனால் ஜனநாயகத்துக்காக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications