ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் மரணம்... அமெரிக்க தாக்குதலில் பலியானதாகத் தகவல்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஏவுகணை தாக்குதலில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவை சேர்ந்த இளைஞர், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 20 பேர் கொண்ட குழு, கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தது. இந்தச் செய்தி இந்தியா முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிக்கு, கேரள குழு ஈரான் நாட்டு வழியாகச் சென்றனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வரும் பகுதியில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
அமெரிக்கா இதுவரை நடத்திய தாக்குதலில் கேரளாவில் இருந்து சென்ற மூவர் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர் வின்சென்ட் யாகியா, முகமது ஹபீசுதீன் மற்றும் முர்ஷித் முகமது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னொரு கேரள இளைஞர் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், " கேரள இளைஞர் ஐஎஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவர் பெயர் முகமது மார்வான். இவர் அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அண்மையில் பலியானார். இது தொடர்பான தகவல்களை அவரின் தந்தையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. முகமது மார்வான் கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்." என்று தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் அஷ்பக் மாஜித் என்பவர், கடந்த திங்கள் கிழமை மார்வானின் தந்தையிடம் டெலிகிராம் வழியாகத் தொடர்பு கொண்டு, ' ஏவுகணை தாக்குதலில் முகமது மார்வான் உயிரிழந்தார்' எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கேரள மாநிலத்தில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் யார் யார் இருக்கிறார்கள் என்று தீவிரமாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications