For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுஷ்மா விவகாரம்.... பத்திரிகையாளர்களால் வெளுத்து வாங்கப்பட்ட "அர்னாப் கோஸ்வாமி"

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விவகாரத்தை முன்வைத்து டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமி அடித்த கூத்துகளால் சக பத்திரிகையாளர்களால் சமூக வலைளதங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

'இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்; இது தொடர்பான மின் அஞ்சல்கள் வெளியாகின' என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இடைவிடாமல் அலறிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல டைம்ஸ் நவ் தொலைக்காட்சியே இந்த செய்தியை முதன் முதலாக வெளியிடுகிற என்று அர்னாப் கோஸ்வாமி அன்கோ தம்பட்டம் அடித்துக் கொண்டது. ஆனால் அதே நேரத்தில் டைம்ஸ் நவ் மற்றும் அர்னாப் கோஸ்வாமி நிஜமுகத்தை சக பத்திரிகை பங்காளிகளே சமூக வலைதளங்களில் கிழித்து தொங்கவிட்டனர்.

பத்திரிகையாளர் ராகுல் கன்வால் தமது ட்விட்டர் பக்கத்தில் , இங்கிலாந்தின் சண்டேடைம்ஸ்தான் இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டது; அதை காப்பியடித்த டைம்ஸ் நவ் சேனலோ தாங்களே முதலில் வெளியிட்டதாக தம்பட்டம் அடிக்கிறது என போட்டுடைத்தார்...

அத்துடன் ரேட்டிங்கில் நெ.1-ல் இருந்த டைம்ஸ் நவ் டி.வியை இந்தியா டுடே பின்னுக்குத் தள்ளிவிட்டதால் விரக்தியில் இப்படியெல்லாம் அர்னாப் வகையறாக்கள் செய்வதாகவும் அவர் இன்னொரு குட்டையும் அம்பலப்படுத்தினார்.

இதேபோல் ராஜ்தீப் சர்தேசாயும் சண்டே டைம்ஸ் செய்தியை தன்னுடையது என டைம்ஸ் நவ் டிவி எப்படி உரிமை கொண்டாடலாம் என கேள்வி எழுப்பியிருக்கிறார்..

இந்த பஞ்சாயத்தில் ஏரளமான முன்னணி பத்திரிகையாளர்களும் களமிறங்கி அர்னாப் கோஸ்வாமியின் கோல்மால்களை தோரணம் கட்டிவிட்டனர்!!

English summary
Times Now channel's Arnab 'tweeted' by Senior Journos for his false claim on Sushma- Lalit Modi story wich was first published in SundayTimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X