ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் சுட்டுக்கொலை.. உதவி எஸ்ஐ வெறிச்செயல்! யார் இவர்? மனைவி பகீர் தகவல்
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த உதவி எஸ்ஐ கோபால் தாஸ் பற்றிய விஷயங்களை அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை இன்று உதவி எஸ்ஐ மோகன் தாஸ் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் அமைச்சர் நாபா நபா கிஷோர் தாசுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது காலமானார். இந்நிலையில் தான் துப்பாக்கியால் சுட்டு அமைச்சரை கொன்றதாக உதவி எஸ்ஐ கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றிய பகீர் தகவலை மனைவி கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். நவீன் பட்நாயக் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான இவர் நவீன் பட்நாயக்குடன் மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று மதியம் நபா கிஷோர் தாஸ் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜ்ராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு
இதையடுத்து நபா கிஷோர் தாஸ் காரில் இருந்து இறங்கினார். இந்த வேளையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில் நபா கிஷோர் தாஸின் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்தன. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்து கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மரணம்
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன்பிறகு அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் ஐசியூவில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உதவி எஸ்ஐ அதிரடி கைது
இந்நிலையில் தான் அமைச்சர் நபா கிஷோர் தாஸை போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உதவி சப் இன்ஸ்பெக்டரான கோபால் தாஸ் தான் அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. தற்போது அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார் என்பது பற்றி இன்னும் எந்த தகவலையும் போலீசார் வழங்கவில்லை.

மனைவி சொன்ன பகீர் தகவல்
இந்நிலையில் தான் உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் பற்றி அவரது மனைவி ஜெயந்தி தாஸ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ இன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டேன். காலையில் மகளுடன் என் கணவர் வீடியோ காலில் பேசினார். அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் இருந்து குணமாக வேண்டி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த மருந்துகளை எடுத்த பிறகு அவர் சரியாக நடந்து வந்தார். கடைசியாக அவர் வீட்டுக்கு வந்து 5 மாதங்கள் ஆகிறது'' என்றார்.

மனநலம் பாதிக்கப்பட்டவாரா?
இதனால் அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக எந்த விபரங்களையும் போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு இதுபற்றி விபரங்களை போலீசார் தெரிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications