அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்களைத் தடுத்து வைக்க 6 தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோல்பாரா மாவட்டத்தில் தற்போது 7-வது தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்தடுப்பு முகாம்களில் 2017-ம் ஆண்டில் இருந்து 1000-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்க சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்கிறது அஸ்ஸாமின் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம்.
அஸ்ஸாம் மாநில அரசும் உயிரிழப்புகளை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் குவஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு தடுப்பு முகாம் கைதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications