உ.பி தலித் சகோதரிகள் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே: சிபிஐ தகவல்
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரு தலித் சகோதரிகள் மரண வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இவருவரும் கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே செய்து கொண்டதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதன் அறிக்கை நாளை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ளது பதான் கிராமம். இங்கு கடந்த மே மாதம் 27ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்ற இரண்டு தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மறுநாள் காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சகோதரிகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணை அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது சிபிஐ.
அந்த அறிக்கையில், தலித் சகோதரிகள் இருவரும் கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே செய்து கொண்டனர். எனவே கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக குடும்பத்தாரே, பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகளை கவுரவக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதும் நினைவிருக்கலாம்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் சிபிஐ அவசரம் காட்டக் கூடாது என்றும் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், ஊர்வேஷ் யாதவ் என்ற சகோதரர்களும், போலீஸ் காரர் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications