பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரத்த வங்கி
பெங்களூர்: ரோட்டரி பெங்களூர் டிடிகே ரத்த வங்கி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பெங்களூர் இந்திரா நகரில் உள்ளது ரோட்டரி பெங்களூர் டிடிகே ரத்த வங்கி. இந்த வங்கி மக்களிடையே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த ரத்த வங்கியின் நிறுவனர் டாக்டர் லதா ஜெகநாதன் மற்றும் சமூக சேவைகள் துறை தலைவர் ஷாலினி கம்பீர் ஆகியோர் சேர்ந்து நமகாகி நாவே என்னும் திட்டத்தை துவங்கினர். அவர்கள் இத்திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் குறைவான சம்பளத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உடல் நல பிரச்சனைகள், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பெங்களூர் மெடிக்கல் சர்வீசஸ் டிரஸ்டில் அங்கம் வங்கிக்கும் ரோட்டரி பெங்களூர் டிடிகே ரத்த வங்கி 30 ஆண்டு பழமை வாய்ந்த என்.ஜி.ஓ. ஆகும்.