ஐயகோ.. என்னே இந்த ஐடி தலைநகருக்கு வந்த சோதனை! பெங்களூரில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்
பெங்களூர்: நாட்டின் ஐடி துறை தலைநகரான பெங்களூரில் முதலில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்ட நிலையில், அது, 3 மணிநேரமாக கூட்டப்பட்டு, இப்போது அது 4 மணி நேரமாக அதிகரித்துவிட்டது. இதனால் பெங்களூர் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயச்சந்திரா 10 நாட்கள் முன்புதான் அறிவித்திருந்தார். அவர் சொல்லி வாய்மூடுவதற்குள் மின்வெட்டும் அமலுக்கு வந்தது. காலையிலும், இரவிலும் தலா 1 மணிநேரம் மின்வெட்டு செய்யப்பட்டது.

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பெங்களூரில் மின்வெட்டு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக பெங்களூர் மின்சார சப்ளை நிறுவனம் (Bescom) அறிவித்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள், 3 முறை தலா 1 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்கப்போகிறோம் என்று பெஸ்காம் கூறியது.
3 மணி நேரம் மின்வெட்டால் பெங்களூர் நகர மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மழையால் கொசுத்தொல்லை அதிகரித்து, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் நிலையில், கொசு காயில்களை கொளுத்தவும் மின்சாரம் இல்லாமல் மக்கள் புலம்புகிறார்கள்.
இந்நிலையில், அடிமேல் மற்றொரு அடியாக, இனிமேல் 4 மணி நேரம் மின்கட் செய்யப்படும் என்று பெஸ்காம் அறிவித்துள்ளது. இதனால் பெங்களூர்வாசிகள் கடும் அவஸ்தைப்படுகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தையும் பெஸ்காம் வெப்சைட் தாறுமாறாக கொடுப்பதால் மக்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுத்தனர். இந்த கோபத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இப்படி தீர்த்துக்கொள்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications