லோன் வேணுமா லோனு..கணவரை பிரிந்த பெண்கள் தான் குறி! பக்கா ஸ்கெட்ச் போட்ட சேத்தன்! பதறிப் போன போலீஸ்!
போபால் : வங்கிக் கடன் தருவதாகக் கூறி கணவனை இழந்த மற்றும் கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் போபாலைச் சேர்ந்தவரான குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் மக்வானா நியூ ராணிப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி வந்திருக்கிறார்.
2020ஆம் ஆண்டில் ஒரு முன்னணி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளரான பெண் ஒருவர், அழகு சாதன தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்காக வங்கி கடனுக்காக சேத்தன் மக்வானா சந்தித்துள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்
அவர்களின் சந்திப்புக்குப் பிறகு அடிக்கடி லோன் நிச்சயம் தருவதாகக் கூறி சேத்தன் அடிக்கடி பேசியதோடு, வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பேசியுள்ளனர்.. ஒருகட்டத்தில் எல்லை மீறிப் பழகிய சேத்தன், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அப்பெண்ணிடம் உறுதியளித்ததாகவும், தனது கணவரை விட்டு வந்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

பெண்ணிடம் மோசடி
இதனை நம்பிய அப்பெண், உள்ளூர் நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததோடு, ஜூன் 10 அன்று தனது கணவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். இந்நிலையில் மக்வானா பின்னர் பாவ்நகரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் தப்பிச் சென்றத்தோடு, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

பாலியல் பலாத்காரம்
இதனை நம்பிய அப்பெண், உள்ளூர் நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததோடு, ஜூன் 10 அன்று தனது கணவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். இந்நிலையில் மக்வானா பின்னர் பாவ்நகரில் உள்ள தனது சொந்த ஊருக்குச் தப்பிச் சென்றதோடு, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

அதிரடி கைது
அதில், ஜூன் 3ம் தேதி தானும் மக்வானாவும் வெளியே சென்றிருந்ததாகவும், தன்னை இறக்கிவிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது, அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் தனது எஃப்ஐஆரில் கூறியுள்ளார். மக்வானா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், தற்போது தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து பலாத்கார புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி சேத்தனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications