'டச் ஸ்கிரீன்' போன் வாங்கித் தர தந்தை மறுப்பு: பூச்சி மருந்து குடித்து 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உயர்ரக செல்போன் வாங்கித் தர தந்தை மறுத்ததால், மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
தன் நண்பர்கள் சிலர் டச் ஸ்கிரீன் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்து, தனக்கும் அதுபோல் ஒன்று வேண்டும் என தந்தையிடம் நச்சரித்துள்ளான் மசுத். ஏற்கனவே வீட்டில் இரண்டு சாதாரண போன்கள் உள்ளதாலும், டச் ஸ்கிரீன் செல்போன் வாங்குமளவிற்கு பொருளாதார வசதி இல்லாததாலும், மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மபிபுல்.
இதனால் மனமுடைந்த மசுத், நேற்று முன்தினம் இரவு, விவசாயத்திற்காக மபிபுல் வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டான். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த மசுத்தை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர் அவனது பெற்றோர்.
ஆனபோதும், சிகிச்சைப் பலனில்லாமல் நேற்று மசுத் பரிதாபமாக உயிரிழந்தான்.
மசுத்தின் நினைவாக அவனது பள்ளியில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அப்பள்ளித் தலைமையாசிரியர், ‘படிப்பில் படுசுட்டியாக இல்லாவிட்டாலும், மரியாதை மற்றும் நல்லொழுக்கத்தில் நல்ல மாணவனாக மசுத் திகழ்ந்தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications