For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் ராகுல் பிரம்மாண்ட பேரணி.. ஆம் ஆத்மி, இடதுசாரிகளும் பங்கேற்பு.. கண்டன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வடஇந்தியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்.. டெல்லியில் ராகுல் பெரிய பேரணி!-வீடியோ

    சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது. தற்போது இவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.. இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.

    இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது.

    எங்கு எல்லாம் நடக்கிறது

    பீகார், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், பாஜக ஆளாத மாநிலங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டம் நடக்கிறது

    இந்தியா முழுக்க இதனால் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட உள்ளது. தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போதே வட மாநிலங்களில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் தொடங்கிவிட்டது.

    பெரிய அளவில் மறியல்

    பெரிய அளவில் மறியல்

    தமிழகத்தில் போராட்டம் அமைதியாக நடந்தாலும் வடமாநிலங்களில் போராட்டம் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீகாரில் சிறிய சிறிய வன்முறைகள் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் சாலையில் டயர்களை போட்டு கொளுத்தி வருகிறார்கள். அதேபோல் பாஜக தலைவர்களின் உருவ பொம்மையும் ஆங்காங்கே எரிக்கப்படுகிறது.

    டெல்லி ஆர்ப்பாட்டம்

    டெல்லி ஆர்ப்பாட்டம்

    தற்போது டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது. ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஆயிரக்கணக்கானோர் நடைபயணம் செய்தனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.

    பிரம்மாண்ட பேரணி

    பிரம்மாண்ட பேரணி

    டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடந்து வருகிறது.சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.ஆம் ஆத்மீ கட்சியினரும் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி நீண்டது.

    போராட்டம்

    தற்போது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது. இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டுள்ளது. அங்கு பெட்ரோல், டீசல் விலைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

    English summary
    Bharath Bandh: Rahul starts his March with cadres against the petrol-diesel hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X