பணம் இல்லை, நகை இல்லை.. வீட்டுக்கு எதுக்கு பூட்டு கலெக்டரே?.. அரசு லெட்டர் பேடில் கடிதம் எழுதிய திருடன்
போபால்: பணம் இல்லாத நிலையில் வீட்டை எதற்காக பூட்டினீர்கள் என துணை ஆட்சியர் வீட்டிற்கு திருட வந்து ஏமாந்து போன திருடன் கடிதம் எழுதிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் திரிலோச்சன் கவுருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார்.
அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து சம்பவம் நடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.

போலீஸார்
அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதை படித்து பார்த்த போலீஸாருக்கு ஆச்சரியமும் சிரிப்பும் வந்தது. அந்த கடிதத்தில் திருடன் துணை ஆட்சியர், அதாவது வீட்டின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அதாவது பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டிருந்தது.

கடிதம் வைரல்
இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் மனஉளைச்சலுக்குள்ளானதால் இது போல் கடிதம் எழுதிவிட்டு சென்றது அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆட்சியர் புகார்
செப்டம்பர் 20ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டு அக்டோபர் 9ஆம் தேதி வீடு திரும்பும் போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ 30 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். அதிலும் அந்த திருடன் துணை ஆட்சியரின் நோட் பேட், பேனாவை கொண்டே எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

கேமரா காட்சிகள்
இதையடுத்து போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அந்த மாநிலத்தின் உயர் காவல் துறை அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தனை காவல் துறை அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தைரியமாக வந்து கொள்ளையடித்ததோடு கடிதம் எழுதி வைத்த சம்பவம் குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications