கருத்தடை ஆபேரஷன் செய்த 11 பெண்கள் பலி - நேரடியாக வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் யோசனை
பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய குடும்பக்கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவால் பலியான பெண்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 49 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சட்டீஸ்கர் சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்
இந்த சம்பவத்தினால் பிலாஸ்புர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் ஆர்.கே.பாங்கே, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.கே. குப்தா, மாவட்ட குடும்ப நலத் திட்ட அமைப்பாளர் கே.சி. உராவோ, டகாட்புர் ஒன்றிய மருத்துவ அலுவலர் பிரமோத் திவாரி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்கை ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இன்று நிராகரித்தது.
"சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புகொண்டு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது.
பத்திரிகை செய்திகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியதற்கு பதிலாக, இதுதொடர்பாக நேரடியாக மனு தாக்கல் செய்திருக்கலாம்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
-
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications