தற்கொலைக்கு முயல்வது தண்டைக்குறிய குற்றம் இல்லை.. சட்டத் திருத்தம் நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தற்கொலை முயற்சியை குற்றமாக பார்க்காமல், மன அழுத்த பிரச்சினையாக பார்க்கும் வகையில், மனநல ஆரோக்கிய பராமரிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜிவு 2014, டிசம்பரிலேயே, லோக்சபாவில் இந்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறியிருந்தார்.

தற்போதுள்ள நடைமுறைப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.
ஆனால், சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று, தற்கொலை முயற்சி செய்வோரை மன அழுத்த பாதிப்புள்ளோர் என கருதி, உரிய சிகிச்சையும், அரவணைப்பும் அளிக்க புதிய சட்ட திருத்தம் வகை செய்கிறது.












Click it and Unblock the Notifications