மக்களை மதிப்பதேயில்லை.. பணத்தால் எம்எல்ஏக்களை இழுப்பதுதான் பாஜக வேலை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
இம்பாலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி ஓட்டு சேகரித்தார். பிரியங்கா பேசியதாவது:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14ல் தேர்தல்கள் முடிவடைந்தன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் பிப்.,20ல் தேர்தல் நடைபெற உள்ளது.

மணிப்பூர் நிலவரம்
மணிப்பூரில் பிப்.,28ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. நாங்தோம்பம் பீரன் சிங் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இம்பாலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி ஓட்டு சேகரித்தார். பிரியங்கா பேசியதாவது:

பஸ்களில் இலவச பயணம்
மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். சுற்றுலா திட்டங்கள் மேம்படுத்தப்படும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படும். காங்கிரஸ் அரசை தேர்வு செய்தால் உங்களுக்கான திட்டங்கள் நிறைந்த வித்தியாசமான அரசு கிடைக்கும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அளிக்கப்படும்.

எம்எல்ஏக்களை இழுக்கும் பாஜக
மணிப்பூருக்கான கடந்த தேர்தலில் காங்கிரஸ் தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக இருந்தது. மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜக மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை. பிற கட்சி எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைத்தது.
எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து கட்சி, கூட்டணிக்குள் இழுக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்'' என்றார்.

கடந்த முறை நடந்தது என்ன
மணிப்பூரில் 2017 ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் வேண்டும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவானது. இதையடுத்து சிறிய கட்சிகளான என்பிஎப், என்பிபி உள்ளிட்ட சிறிய கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications