கருப்பு பணம்: மூன்று பேர் பெயரை உச்சநீதிமன்றத்திடம் அளித்தது மத்திய அரசு
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள 3 பேரின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள, பணம் பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருப்பு பண மீட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த பிரமாணப் பத்திரத்தில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும், சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் யார், யார், தமிழக அரசியல்வாதிகள் பெயர்கள் இதில் உள்ளதா என்பது போன்ற ஆர்வம் பல தரப்பிலும் எழுந்திருந்தது.

இந்த பிரமாணப்பத்திரத்தில், இந்தப் பட்டியலில் டாபர் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் பிரதிப் பர்மன், ராஜ்கோட் பகுதியைச்சேர்ந்த பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த ராதா எஸ். டிம்போலா ஆகிய 3 பேரின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
இந்த மூவரில் ஒருவரும் அரசியல்வாதி கிடையாது. இருப்பினும் இன்னும் பல கட்டங்களாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. மொத்தம் 138 பெயர்கள் கொண்ட பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Government files affidavit in #SC disclosing names of #blackmoney holders pic.twitter.com/OFjDkpkHQY
— liveIndia (@LIVEINDIA_NEWS) October 27, 2014 கருப்பு பண விவகாரத்தில் டாபர் நிறுவன முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன் பெயர் அடிபட்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் இப்போதையே இயக்குனர்களில் ஒருவரான மோகில் பர்மன் ஐபிஎல் கிரிக்கெட் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த அணிக்கு டாபர் நிறுவனம், புரமோட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் கருப்பு பணம் வைத்துள்ளோர் பட்டியலில் தனது பெயர் இருப்பது குறித்து பிரதீப் பர்மன் கூறுகையில், சுவிஸ் வங்கியிலுள்ள எனது கணக்கு சட்டத்திற்கு உட்பட்டதுதானே தவிர, அது கருப்பு பணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராதா எஸ். டிம்போலா 2009-10ம் நிதியாண்டில் அட்வான்ஸ் வருமான வரியாக ரூ.30.8 கோடியை செலுத்தியுள்ளார். அதேபோல அந்த ஆண்டில் மேலும் கூடுதல் வருமான வரியாக ரூ.20 கோடியை கட்டியுள்ளார். கருப்பு பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியலில் தனது பெயர் எப்படி சேர்ந்தது என்பது புதிராக உள்ளதாக பங்கஜ் சமன்லால் லோதியா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications