பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்கள் அல்ல: இந்திய கடற்படை
காந்திநகர்: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்தது மீனவர்கள் அல்ல என்று இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 31-ந் தேதி இரவு பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் சரண் அடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பதற்றம் அடைந்த பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் படகினை மிகவும் வேகமாக செலுத்தினர்.
சந்தேகமடைந்த கடற்படை அவர்களை பின்தொடர்ந்ததால் இந்த படகு வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டது. இதில் படகில் இருந்த 4 பேரும் உயிரிழந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால் நாட்டின் நற்பெயரை கெடுக்க இந்தியா முயற்சி செய்வதாகவும், இந்தியா கூறுவது போல எந்த படகும் செல்லவில்லை என்றும் பாகிஸ்தான் மறுத்துள்ளது
இந்நிலையில், சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்களை போல தெரியவில்லை. அவர்கள் மீனவர்களை போல உடையையும் அணிந்திருக்கவில்லை. மாறாக படகில் எந்தவொரு மீன்பிடி வலைகளும் தென்படவில்லை. அந்த படகில் 4 பேர் இருந்தனர். அவர்கள் டி-சர்ட்டுகளையும், ஹாப் பேண்டையுமே அணிந்து இருந்தார்கள். இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பியது.
பல இந்திய இன்டலிஜன்ஸ் ஏஜென்சிகள் கூட்டாக இணைந்து இந்த சம்பவத்தை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் உண்மையை கண்டுபிடிப்போம். 24 மணிநேரமும் நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம். நமது கப்பல்களும், விமானங்களும் கடற்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் உள்ளன என்று இந்திய கடற்படை கமாண்டர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications