அஸ்ஸாமில் மோசமடையும் வெள்ள நிலைமை: நீரில் மூழ்கிய எல்லையோர ராணுவ முகாம்கள்
துப்ரி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வங்கதேச எல்லையையொட்டி உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களைச் சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2 வாரங்களில் வெள்ளத்தால் 30 பேர் பலியாகியுள்ளனர்.

துப்ரி மாவட்டத்தில் வங்கதேச எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் வெள்ளம் பெரும் தலைவலியாக உள்ளது. அவர்களின் முகாம்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாமுக்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக உள்ளது.
வங்கதேச எல்லையையொட்டியுள்ள ஹதிசார் எல்லைப் பாதுகாப்பு படை முகாமிற்குள்ளேயே படகில் செல்ல வேண்டி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அந்த முகாமில் இடுப்பளவு நீர் உள்ளது.
இது குறித்து அந்த முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவர் கூறுகையில்,
எங்களின் படுக்கைகள் நீருக்கு அடியில் உள்ளன. நாங்கள் விரகு அடுப்பில் சமைத்து வந்தோம். தற்போது சமையல் செய்வது பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லைப் பகுதியை படுகுகள் மூலம் கண்காணித்து வருகிறோம் என்றார்.
அடுத்த சில நாட்களில் மழை நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மாநிலத்தில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications