நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. 'டெக்கி' கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!
பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் மீது நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்தினார்கள். விவசாயம் தொடங்கி உள்கட்டமைப்பு வரை பல துறைகளில் இவர் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் இணையம் சார்பாக இவர் வெளியிட்ட அறிவிப்புகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
அதில், பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். அதேபோல் நாடு முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த கூடங்கள் அமைக்கப்படும், டேட்டா சென்டர்கள் என்று இது அழைக்கப்படும். நாடு முழுக்க இது அமைக்கப்படும்.
இங்கு ஏஐ தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படும். இது தொடரான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். மொத்தம் 8000 கோடி ரூபாய் இதற்கு வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும். கிராமங்களில் இணையம் கொண்டு வர 6000 கோடி ரூபாய் அளிக்கப்டும்.
பாரத் நெட் மூலமாக இந்த இணையம் அளிக்கப்படும். இந்தியா முழுக்க இணையம் தொடர்பான தகவல்கள், ஒருங்கிணைக்கப்படும், என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications