ராணுவ தளபதிகள் மீது சொத்துக்குவிப்பு புகார்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு !
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய ராணுவ தளபதிகள் இருவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவப் படையில் தளபதிகளாக தற்போது பணிபுரிந்து வரும் மேஜர் அசோக் குமார், மேஜர் எஸ்.எஸ். லம்பா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இருவர் மீதும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ராணுவ தளபதிகள் இருவருக்கும் நாட்டிற்காக சேவை புரிந்ததற்காக கடந்த ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications