வரிச்சலுகையை காட்டி ஐ.டி. நிறுவனங்களை இழுக்கிறார் நாயுடு: மோடியிடம் கர்நாடகா புகார்
பெங்களூர்: அண்டை மாநிலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு இழுக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.
புதிய மாநிலம் என்பதால் ஆந்திராவுக்கு தொழில்துறை வரிச் சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. இந்நிலையில் ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு ஈர்க்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார்.

அண்மையில் அவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா சென்று ஐ.டி. நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அவர் சிஸ்கோ நிறுவன வளாகத்தில் ஊழியர்களை சந்தித்து பேசினார். அவர் இதுவரை ஒன்பது முறை பெங்களூர் வந்து தொழில் அதிபர்கள், ஐடி நிறுவனத்தாரை சந்தித்து பேசியுள்ளார்.
அவர் பெங்களூரில் பிளிப்கார்ட், பர்ஸ்ட் அமெரிக்கன் கார்பரேஷன், ஐடிசி இன்போடெக் மற்றும் ஏபிபி உள்ளிட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அண்டை மாநிலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு இழுக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள வரிச்சலுகையால் ஐ.டி. நிறுவனங்களும் அங்கு செல்ல துவங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஐ.டி. முதலீட்டை கவர்வதே நாயுடுவின் திட்டம். அவர் ஆந்திராவில் 50 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்பை ஏற்படுத்த விரும்புகிறார்.
மேலும் மாநிலத்தில் சொந்தமாக தொழில் துவங்குவோரையும் அவர் ஊக்குவித்து வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications