இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!
இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் நகரங்களில் ரயில் பாதைகள், சாலை பணிகளை மேம்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தானின் பெஷாவர் முதல் கராச்சி வரை 1872 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாகவும், தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது. இத்திட்டத்திற்காக 45000 கோடி ரூபாய் கடனை தனது நட்பு நாடான சீனாவிடம் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் தவிப்பு
ஆனால் தற்போதைய நிலையில் கொரோனா காரணமாக பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இந்த சூழலில் புதிதாக கடனை கேட்டுள்ளது.

சீனா மறுப்பு
இது தொடர்பாக அண்மையில் நடந்து பேச்சுவார்த்தையில் ரயில் திட்டத்திற்கு பாகிஸ்தான் கடன் கேட்டது. சீனாவோ, கூடுதல் உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே கடன் தருவோம் என்று நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையையும் சீனா நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் கடன்
உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு மட்டுமே ஜி -20 நாடுகளிடமிருந்து கடன் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அடிப்படையில் பாகிஸ்தான் கடன் கேட்ட நிலையில், சீனா கூடுதல் உத்தரவாதம் கேட்டுள்ளது.

சீனா அளித்த பதில்
6 பில்லியன் டாலர் (45000 கோடி ரூபாய் ) கடனை சீனாவிடம் 1 சதவீத வட்டி விகிதத்தில் மட்டுமே பெறுவது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 10 வருட கால அவகாசம் ஆகியவை பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், சீனா வணிக மற்றும் சலுகை கடன்களை முன்மொழிந்துள்ளது, திட்ட செலவில் 85 சதவீதத்தை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன். இரு ஆண்டுகளிலிருந்து திருப்பிச் செலுத்த தொடங்க வேண்டும் என்று சீன முன்மொழிந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications