நிலக்கரி ஒதுக்கீடு ரத்து: இந்திய நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்!
டெல்லி: 1993 முதல் 2010வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதன் காரணமாக சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரியை சார்ந்த துறைகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்தது. மேலும் பொதுநலன் மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1993 முதல் 2010வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி மின்சாரம், இரும்பு, மற்றும் சிமெண்ட் ஆலைகள் கலக்கத்தில் உள்ளன. ஏனெனில் இந்த ஆலைகள் பலவும் நிலக்கரி சுரங்கங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்திருந்தன.
குறிப்பாக எஸ்சார், ஜிந்தால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனம், வேதாந்தா, ஜேஎஸ்டபிள்யூ, என்டிபிசி, செயில், ரிலையன்ஸ் மின்சாரம், ஹின்டல்கோ போன்ற நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க உள்ளன. நிலக்கரி சுரங்க ரத்து காரணமாக சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்துறைக்கு மிகப்பெரிய இக்கட்டை ஏற்படுத்தும்.
-
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications