குஜராத்தில், ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு.. அதிருஷ்டவசமாக தப்பிய ராகுல்
குஜராத்தில், ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு.. அதிருஷ்டவசமாக தப்பிய ராகுல்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் மர்ம நபர்கள் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் சென்றபோது, அவரது பாதுகாப்பு கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது.

அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார். இந்த தாக்குதல் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற வெறுப்புணர்வால் பாஜகவால் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
BJP goons attack Cong VP Rahulji's car in Lal Chowk, Dhanera, Banaskanta, Gujarat. Disgusting & disgraceful: RS Surjewala, Cong on Twitter pic.twitter.com/LebtcJgZRq
— ANI (@ANI_news) August 4, 2017
இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது. உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான தாக்குதல் குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்தியுள்ளது. இதனிடையே கல்வீசியவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Congress VP Rahul Gandhi is fine but team members are injured. #BJPGoons try to harm us, but we will only emerge stronger! pic.twitter.com/01jZmIGDcL
— Congress (@INCIndia) August 4, 2017
இந்த தாக்குதலை நடத்தியது பாஜக என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நலமாக இருப்பதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் காங்கிரசை வலுப்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ராகுலுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியும் போராட்டம் நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு ரிசார்ட்டில் அடைத்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடந்துள்ளது. மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டுவிட்டு, எம்.எல்.ஏக்களை சொகுசாக இருக்க வைப்பதா? என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications