அதிமுகவுக்கு 20 இடங்கள், திமுகவுக்கு 14, காங்கிரஸுக்கு முட்டை தான் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு அதிகபட்சமாக 20 இடங்கள் தான் கிடைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவும் இடதுசாரிகள் உடன் இருந்தால் தான்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் மற்றும் லோக்நிதி ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன. தற்போது அவை கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக:
இந்தக் கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் அதிமுக 14 முதல் 20 இடங்களில் தான் வெற்றி பெறுமாம்.

திமுக
திமுக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 14 சீட்கள் கிடைக்குமாம். திமுகவை விட அதிமுக கூட்டணிக்கு சற்றே அதிகமான சீட்கள் தான் கிடைக்குமாம். இது இப்போதைய திமுக கூட்டணி வைத்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவாகும். தேமுதிக இணைந்தால் நிலைமை மாறும்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 4 சீட்கள் மட்டுமே கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 5 முதல் 9 சீட்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளில் பாஜக, மதிமுக அடங்கும். பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கலாம்.

பிரதமர் வேட்பாளர்-மோடியை விட ராகுலுக்கே ஆதரவு
தமிழகத்தை பொறுத்த வரை பிரதமர் வேட்பாளருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 21 சதவீதம் பேரும், நரேந்திர மோடிக்கு 16 சதவீதம் பேரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு 8 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 6 முதல் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையே தான் கடும் போட்டி இருக்குமாம்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 11 முதல் 17 சீட்களும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 10 முதல் 16 சீட்களும், பிற கட்சிகளுக்கு 1 முதல் 5 சீட்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications