காஸ் சிலிண்டர் புக் செய்ய பேஸ்புக் போதும்கே.. விரைவில் தமிழகத்தில் அசத்தல் திட்டம் அறிமுகம்
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறை வடஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். குறிப்பாக இல்லதரசிகள் இதற்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்கள், எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது முதற்கட்டமாக வடஇந்தியாவில் சோஷியல் மீடியா மூலமாக முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இல்லதரசிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இச்சேவை விரைவில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறையால் கள்ளசந்தையில் கேஸ் விற்கப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications