டெய்லிஹண்ட், ஏஎம்ஜி மீடியா நடத்திய Story For Glory.. 12 பேர் வெற்றியாளர்களாக அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் மீடியா துறையில் சாதிக்கும் வகையிலான திறமையாளர்களை கண்டறிய SToryForGlory எனும் நிகழ்ச்சி உரிய பயிற்சிகளுடன் நடத்தப்பட்டது. இதில் 1000 விண்ணப்பத்தாரர்களில் 12 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள செய்தி தளங்களில் டெய்லிஹண்ட்டும் ஒன்றாக உள்ளது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளை செய்திகளை வழங்கி வருகிறது.
டெய்லிஹண்ட் (Daily Hunt),அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்குடன் (AGM Media Network) இணைந்து இந்தியாவில் திறமையாக கதை சொல்பவர்களை தேடும் வகையில் #StoryForGlory நிகழ்ச்சியை நடத்தியது.

20 பேருக்கு பயிற்சி
இந்த StoryforGloryல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்கள் வீடியோ மூலமாகவும், எழுத்து வடிவமாகவும் Story சொல்லும் திறமையை வெளிக்காட்டினர். இதில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு எம்ஐசிஏ மீடியா அகாடமியில் 8 வாரம் பெல்லோஷிப் 2 பயிற்சி கற்றல் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு அச்சு மற்றும் வீடியோ என்று பிரிவுகளாக போட்டி பிரித்து நடத்தப்பட்டது.
12 பேர் வெற்றி
இந்த போட்டியிலும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிரூபித்தனர். திறமையுடன் தனித்துவமாக செயல்பட்ட 12 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இறுதியில் டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தலைமை எடிட்டர் மற்றும் சிஇஓ சஞ்சய் புகாலியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செயல் இயக்குனர் அனந்த் கோனகா, பிலிம் கம்பெனியன் நிறுவனம் அனுபமா சோப்ரா, ஷீதபிபிள் நிறுவனர் சாய்லி சோப்ரா, Ganon connection நிறுவனர் நீலேஷ் மிஸ்ரா, பேக்டர் டெய்லி நிறுவனம் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.
வெற்றியாளர்களுக்கு வாய்ப்பு
இந்த வெற்றியாளர்கள் அனைவரும் பத்திரிகை துறையில் நுழையவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களிடம் உள்ள தனித்துவத்தை அடையாளம் காண்பதற்கான முன்முயற்சியை மேற்கொள்வது மட்டுமின்றி பத்திரிகை துறையில் சாதிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
டெய்லிஹண்ட் நிறுவனர் கூறுவது என்ன?
இதுபற்றி டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, "இந்தியாவில் ஊடகத்தின் திறனை மேம்படுத்துவதிலும் புதிய வகையில் வடிவமைக்கவும் டெய்லிஹண்ட் உறுதியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இந்தியாவில் மிகச்சிறந்த வகையில் Story சொல்லும் நபர்களை தேர்வு செய்துள்ளோம். தற்போதைய நிலையில் அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இவர்களுக்கான தேவை உள்ளது. இதனால் தான் 'StoryofGlory' நடத்தினோம். இதன்மூலம் சிறந்த வகையில் கதை எழுதி சொல்லும் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கான தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம்'' என்றார்.
ஏஎம்ஜி சிஇஓ
இதுபற்றி ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தலைமை எடிட்டர் மற்றும் சிஇஓ சஞ்சய் புகாலியா கூறுகையில், ‛‛இந்தியாவில் பல திறமையாளர்கள் உள்ளனர். மேலும் Story சொல்லும் நபர்களின் தாயகம் இந்தியா என்றால் மிகையாகாது. Dailyhunt உடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை ஆசிரியர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்குவது சிறப்பானதாகும். இதற்காக எங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்பது அமோகமாக உள்ளது. இந்த முயற்சி என்பது இந்தியாவின் மிகவும் திறமையான படைப்பாளிகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமான செயலை செய்ய வைப்பது தான்'' என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications