For Daily Alerts
Just In
ஹாஹாஹா.. லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தத்துக்கு "தொழில்நுட்ப கோளாறுதான்" காரணமாம்..!!
நாடாளுமன்ற லோக்சபா நேற்று மாலை 3 மணிக்கு கூடியது. அப்போது தெலுங்கானா மசோதா மீது எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசத் தொடங்கினார். தெலுங்கானாவுக்கு எதிராக சபையில் கடும் அமளியும் ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரென லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சுமார் 80 நிமிடங்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லோக்சபா டிவி விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒளிபரப்பு தடங்கலான விஷயம் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக வருகிறோம். லோக்சபாவில் இருந்து சமிக்ஞைகள் வராததாலே வேறு வழியின்றி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Lok sabha TV and the secretariat of the lower house of Parliament Tuesday blamed the almost 80-minute blackout of the live telecast of proceedings - when the hugely controversial bill to create Telangana was being passed - on a "technical snag" and ordered separate inquiries to "probe" the incident.
Story first published: Wednesday, February 19, 2014, 10:25 [IST]