இந்திய சாலைகளில் கார், பஸ் மட்டும்தான் ஓடனுமா.. இனிமேல் விமானமும் ஓடும் பாஸ்..!
டெல்லி: இந்தியாவில் உள்ள 22 நெடுஞ்சாலைகளை விமான ஓடுபாதையாக மாற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த சாலைகளும் அடையாளம் காணப்பட்டு அவை விரைவில் மேம்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது சாலைப் போக்குவரத்து அமைச்சகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த 22 நெடுஞ்சாலைப் பகுதிகள் உள்ளன.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி கூறுகையில், நெடுஞ்சாலைகளை, விமான ஓடுபாதையாக மாற்றும் திட்டம் குறித்து பரிசீலனையில் இருந்து வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வரவுள்ளது. முக்கியமான இடங்களில் குறிப்பாக, விமான ஓடு பாதை அமைக்க வசதியில்லாத இடங்களில் இது கை கொடுக்கும்.
விரைவில் இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இரு அமைச்சக அதிகாரிகளும் இணைந்து ஆலோசனை நடத்தி திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்துவார்கள்.
சாலையாக அவற்றைப் பயன்படுத்துவதுடன், விமான ஓடுபாதையாகாவும் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப நீள, அகலம் மாற்றப்படும். தற்போது 22 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது ராஜஸ்தானில் அப்படி ஒரு சாலை உள்ளது. அதேபோல அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்றார் கத்காரி.
கடந்த ஆண்டு டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை தரையிறக்கி சோதனை நடைபெற்றது நினைவிருக்கலாம். இதுபோன்ற விமானங்களை தரையிறக்க வகை செய்யும் விதத்தில்தான் 22 நெடுஞ்சாலைகளில் விமான ஓடு பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications