20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது இந்தியா… குளறுபடிக்கெல்லாம் மோடியே காரணம்.. மம்தா பளீர்
பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் 50 நாட்களில் இந்தியா 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: பண மதிப்பு ரத்து என்று மோடியால் அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகப் போகிறது. இந்த 50 நாட்களில் 20 ஆண்டுகள் பின்னோக்கி இந்தியா சென்றுவிட்டது என்றும், நடக்கும் குளறுபடிக்கெல்லாம் பிரதமர் மோடியே காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளாசித் தள்ளினார்.
பண மதிப்பு ரத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 8 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

எந்தவிதமான முன்னேற்பாட்டுத் திட்டங்களும் இல்லாமல் பிரதமர் மோடி பண மதிப்பு ரத்து நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனால் பல குளறுபடிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. அவ்வளவிற்கும் மோடிதான் காரணம். பணமதிப்பு ரத்து என்ற அறிவிப்பின் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மக்களை வேதனைப்படுத்தி வருகிறார். பண மதிப்பு ரத்து என்று அறிவித்து 50 நாள் கடக்க உள்ள நிலையில், பண பரிவர்த்தனை மீதான கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு மிகவும் குறைந்துவிட்டது.
ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஏழைகள் பட்டினியாக இருப்பதுதான் நடந்து வருகிறதே தவிர, தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதும், கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதும் என எதுவும் ஒழியவில்லை. மோடியின் அறிவிப்பால் நாட்டில் மிகப் பெரிய அவசர நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, நியாயமற்றது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications