அறுவை சிகிச்சையால் குரலை இழந்த புற்று நோயாளிகளுக்கு 50 ரூபாய்க்கு குரல் கருவி!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: தொண்டை புற்று நோயால் குரலை இழக்கும் நோயாளிகளுக்கு புதிய குரலை அளிக்கும் கருவியை ரூ.50 செலவில் விற்பனைக்கு கொண்டுவந்து பெங்களூர் மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரிலுள்ளது HCG Cancer Care மருத்துவமனை. இதன் காது, மூக்கு, தொண்டை அறுவைச்சிகிச்சைப் பிரிவின் தலைவரான மருத்துவர் விஷால் ராவ் அவரது தொழிலதிபர் நண்பர் ஒருவருடன் இணைந்து மலிவு விலை குரல் கருவியை உருவாக்கியுள்ளனர்.

புற்றுநோயால் குரலை இழப்பவர்களுக்கு இந்தக் கருவி மூலம் குரலை அளிக்க முடியும். நோயால் குரலை இழப்பவர்களுக்கு குரல் கருவி ரூ.20 ஆயிரம் என்ற விலையில் சந்தையில் கிடைக்கிறது. ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு இதனை மாற்ற வேண்டியது அவசியம் என்பதால், ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
புதிய கருவி குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் வராது.












Click it and Unblock the Notifications