நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று முக்கிய முடிவுகள்?... மோடியை சந்தித்தார் எடப்பாடி
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார்.
டெல்லி: நீட் விலக்கு தொடர்பாக தாக்கல் செய்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழகம், புதுச்சேரி மாநில கட்சிகள் கூறிவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் கட்சிகள் நடத்திவிட்டன.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது மத்திய அமைச்சர்களிடமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்களும் மத்திய அமைச்சர் நட்டாவை பலகட்டங்களாக சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டெல்லியில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6 அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
அப்போது நீட் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர்.
நீட் தேர்வு குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications