அத்வானி யாரை மனதில் வைத்து 'நெருக்கடி' நிலை பற்றி பேசினார்?: சிவசேனா கேள்வி
மும்பை: நெருக்கடி நிலை மீண்டும் வராது என கூற முடியாது என்று யாரை மனதில் வைத்து தெரிவித்தீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது,
நெருக்கடி நிலை மீண்டும் வராது என கூற முடியாது என்று அத்வானி கூறியுள்ளார். அவர் நிச்சயம் யாரையோ நினைத்து தான் அவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது கேள்வி என்னவென்றால் அத்வானி யாரை நினைத்து கூறினார் என்பது தான். நாட்டின் மூத்த அரசியல் தலைவர் அத்வானி. அவர் பல்வேறு சூழ்நிலைகளை பார்த்துள்ளார்.

அவர் தற்போது அரசியலில் அவ்வளவாக ஈடுபடாவிட்டாலும் அவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவரின் நெருக்கடி பேச்சால் தற்போது அனைவரின் கவனமும் அவர் மீது தான் உள்ளது.
அவர் பாஜகவின் உட்கட்சி நிலையை பற்றி கூறினால் அதை அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் முன்பு முரளி மனோகர் ஜோஷி மற்றும் கிர்தி ஆசாத் ஆகியோரும் இது போன்று பேசியுள்ளனர். நெருக்கடி நிலையை நேரில் பார்த்த அத்வானி ஏன் மீண்டும் அந்த நிலை வரலாம் என்றார்.
40 ஆண்டுகள் கழித்து திடீர் என அத்வானி எதற்காக நெருக்கடி நிலை பற்றி பேசியுள்ளார்? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications