கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு போட முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!
கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் போட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கணவரோ அல்லது மனைவியோ கள்ளக்காதல் வைத்துக் கொள்வதைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது. அதேசமயம், இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்காதலை மன ரீதியான கொடுமையாகவும் சித்தரிக்க முடியாது. அதைக் கொடுமையாகவும் கூற முடியாது. இதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டவும் கூடாது. வேண்டுமென்றால் இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் கள்ளக்காதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நபருடன் இணைத்துப் பேசப்பட்ட பெண்ணும், அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக நீதிமன்றங்களில் அப்பீல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து சுப்ரீ்ம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை விதிக்கப்பட்ட நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கிலிருந்தும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது 306, 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமாகும். தவறானதாகும்.
கள்ளக்காதல் என்பதை 498ஏ பிரிவின் கீழ் "ஹராஸ்மென்ட்" என்று சொல்ல முடியாது. அது தவறான நடவடிக்கைதான், செயல்தான் என்றாலும் கூட அதை சித்திரவதை என்ற பட்டியலில் கொண்டு வர முடியாது. குற்றச் செயலாக கருத முடியாது.
ஒரு கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்காக அதைக் கொடுமையாக கருதி மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார் என்று மனைவி கூற முடியாது. அதேபோலத்தான் மனைவிக்கும்.
மன ரீதியான கொடுமை, சித்திரவதை என்பதற்குரிய அம்சங்கள் கள்ளக்காதலுக்கு இல்லை. எனவே அதை அதில் சேர்க்க முடியாது. மாறாக இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்று கூறியுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications