ஆந்திராவில் ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி
ஆந்திராவில் தனது வீட்டில் ஒரு பல்பு பயன்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு விவாசாயி ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருமலை : ஆந்திராவில் தனது வீட்டில் ஒரு பல்பு பயன்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு விவாசாயி ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் கொட்டப்பல்லியில் உள்ள நரசுருகோட்டி கிராமத்தில் ரவீந்தரா என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் இதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மின் இணைப்பு பெற்று, ஒரே ஒரு பல்பு மட்டும் தனது வீட்டில் அவர் போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான மின் கட்டணம் 85 ரூபாயும், ஜனவரி மாதம் 87 ரூபாயும் மின் கட்டணமாக அவர் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மின் கட்டணம் கடந்த 16ம் தேதி வந்தது. அப்போது அதனை பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். அதாவது ஒரே ஒரு பல்புக்கு, மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 690 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது முழுக்க முழுக்க மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமாக தான் பார்க்கப்படுகிறது. மின் கட்டணம் தொடர்பாக கொட்டப்பல்லி மின்வாரிய அதிகாரிகளிடம் ரவீந்தரா கேட்டதற்கு, அவர்கள் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று தெரிவித்தார்களாம். இதனால் அந்த விவசாயி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications