விலைவாசியை கட்டுப்படுத்தாவிட்டால்.. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாகிவிடும்.. உஷார்: ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ‛‛நாட்டில் பணவீக்கத்தை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும்'' என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எச்சரிக்கை விடுத்தார்.
ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார்.
இந்நிலையில்ல நேற்று ஜார்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது விலைவாசி உயர்வு, நாட்டின் பணவீக்கம் குறித்து அவர் சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் பணவீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பட்டியலிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

சிசுக்கொலைகள் அதிகரிக்கும்
‛‛நாட்டில் பணவீக்கம் அதிகரித்தால் வறுமை தலைவிரித்தாடும். சிலர் கூறுவதை போல் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கும் சூழல் ஏற்படலாம். எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெண் சிசுக்கொலை, குழந்தைகள் திருமணங்கள் அதிகரிக்கும். மேலும் பணவீக்கத்தால் நாட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது குழந்தைகளுக்கு கல்வி உள்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தும். இதனால் மத்திய அரசு பணவீக்கம், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

முன்னேற்றம்
பணவீக்கத்தால் நாட்டில் உள்ள ஆதிவாசிகள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக பாதிக்கப்படுவர். வறுமையில் வாடும் இவர்களை முன்னேற்ற மாநிலங்கள் முயற்சிக்கும்போது தேசம் முன்னேற்ற பாதையில் செல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் எப்படி
ஹேமந்த் சோரன் சில காலமாக பாஜகவை தாக்கி பேசி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவரை தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இன்று மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்து பேசினார். அவர் தனது 'மன் கி பாத்' குறித்து மட்டுமே பேசினார். வணிகம், மாநில பிரச்சனைகள் குறித்து கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

சமாஜ்வாதி, காங்கிரஸ்
பணவீக்கம், விலையேற்றம் தொடர்பாக மத்திய பாஜக அரசின் மீது தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛ டீசல், பெட்ரோல், காஸ் சிலிண்டர், கல்வி, மருந்து, உணவுகளின் விலை உயர்ந்துவிட்டது. இது பாஜகவின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது' என விமர்சித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛காஸ், டீசல், பெட்ரோல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பணவீக்க தொற்றுநோய் பற்றி பிரதமரிடம் கேட்க வேண்டும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications