வாரணாசியில் கங்கை ஆரத்தியை ஹெலிகாப்டர் கேமரா மூலம் படம் பிடித்த 4 பேர் யார்?
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புனித நதியான கங்கையில் நடைபெறும் ஆரத்தியை ஹெலிகாப்டர் கேமரா மூலம் அனுமதியின்றி படம் பிடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் தஸ்ஹஸ்மதி என்ற நுழைவுவாயிலில் இருந்து கங்கை நதியை ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி வென்ற பின்னர் பிரதமர் நரேந்திரமோடி இதே இடத்தில் இருந்து தான் கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.

கங்கை ஆரத்தி எடுக்கும் பிரதான நுழைவாயிலில் நேற்று முன்தினம் மாலையில் 4 பேர் எந்தவித அனுமதியும் பெறாமல் சிறிய ஹெலிகாப்டர் கேமரா மூலம் வீடியோ படம் எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து 2 வாக்கி-டாக்கி போன் மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் டெல்லியைச்சேர்ந்தவர் மற்றொருவர் மும்பையை சேர்ந்தவர் என்றும் மற்ற 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுற்றுலா டெலிவிஷன் சேனலுக்காக ஆவணப் படம் எடுத்ததாகவும், அலகாபாத், வாரணாசி, ஷிம்லா, மனாலி மற்றும் ஆக்ரா பகுதியிலும் படம் எடுத்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்களின் பின்னணி குறித்தும் அனுமதி பெறாமல் ஏன் படம் பிடித்தனர் என்பது குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications