துப்பாக்கிச் சூடு நடந்த கோழிக்கோடு விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியது
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையேயான மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்து, அதில் ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட விமான நிலையம் தற்போது இயல்பான முறையில் மீண்டும் செயல்படுகிறது.
கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி மோதலாக வெடித்தது. அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.

இதில் எஸ்.எஸ். யாதவ் (52) என்ற தொழில் பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். பினர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் விமான நிலைய ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்க வேண்டிய விமானங்கள் கொச்சி விமானத்துக்கு திருப்பிவிடப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இ்ச்சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் நிலைமை சரியானதும் மீண்டும் விமான நிலையம் திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குநர் ஜனார்த்தனன் தெரிவித்தார்.
காரணம் என்ன?
சம்பவத்தின்போது, விமான நிலைய ஆணையகத்தின் தீயணைப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் விமான நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது அவருக்கு சோதனை நடத்த சிஐஎஸ்எப் வீரர்கள் முயன்றனர். இதற்கு விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடும் வாக்குவாதம் மூண்டு பின்னர் அது மோதலாக மாறி விட்டது.
சிஐஎஸ்எப் இன்ஸ்பெக்டர் சீதாராம் செளதிரிக்கும், விமான நிலைய ஊழியர் அஜி குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது செளதிரி தனது துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் விமான நிலைய ஊழியர்கள் கோபமடைந்து அவர் மீது பாய்ந்துள்ளனர். அதில் செளதிரியின் துப்பாக்கி கை தவறி வெடித்து யாதவ் உயிரிழந்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications